Tuesday, August 19, 2008


விடுதலை முகாமின் வீரச்சிறார்களே!
விழாக்கள், உறவுகள் கூட்டி உணர்வுகள் கூட்டும், நினைவில் நிற்கும் நிகழ்வுகள் சொல்லும். நிகழ்வுகள் படைக்கும் உன்னத நினைவுகள் உள்ளத்திரையில் பசுமை போர்த்தும், முகம் பார்த்து புன்னகை செய்யும். உன்னத நிகழ்வு உரிமைக்கானதென்றால் உணரும் போதெல்லாம் நரம்புகள் இறுகும், இரத்தப் பயணம் சீர்நிலை கடக்கும், செயல்முனை நோக்கி பாதங்கள் விரையும்.
அகதிப் பட்டறையில் சீரின்றி முடங்கிக்கிடக்கும் நமக்கு இது ‘வெள்ளி விழா” காலம். ஆம், “சிறகொன்று முளைத்து விதையொன்று அலையும் முளைக்க ஒருபிடி மண்தேடி” (இன்குலாப்) என உரிமை மண் விட்டு பிய்த்தெறியப்பட்ட பஞ்சுகளாய் கனடா, ஆஸ்திரேலியா, நார்வே, இந்தியா, செர்மனி, மாஸ்கோ போன்ற தேசங்களில் அகதிகளாய் கரை ஒதுங்க ஆரம்பித்து இது இருபத்தைந்தாம் ஆண்டு, ‘வெள்ளி விழா’.
‘வெள்ளிவிழா’ ஆண்டிலும் அகதியான காரணம் தெரியாது, புரியாது வாழும் பெரியோரும், கல்லூரிப் பேரவையினரும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தவிர்க்க இயலாத உண்மை.
இலங்கையின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் சிங்களவர்களும், பூர்வீகத் தமிழர்களும் மட்டும் பொறுப்பல்ல. மலையகத் தமிழர்களின் பங்கும் அளப்பெரியது. 1820 ஆம் ஆண்டு கம்பளையிலிருந்து சில மைல்களுக்கு அப்பாலிருந்த சீனாப்பட்டி என்ற ஊரில் காப்பிப் பயிர் செய்து அதிக லாபம் கண்ட ஜார்ஜ் போர்ட் என்ற வெள்ளைக்காரருக்குப் பிறகு தொடர்ச்சியாக காப்பிப் பயிர் செய்ய விரும்பிய வெள்ளையர்களால் 1823 முதல் 1839 வரை மொத்தம் மொத்தமாக ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்ட இந்தியத் தமிழர்களே மலையகத் தமிழர்கள்.
கடினமாய் உழைத்து, தம்மையும் நாட்டையும் வளர்த்த மலையகத் தமிழர்களின் உரிமையை, 1948 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 ஆம் திகதி இந்தியா- பாக்கிஸ்தான் குடி உரிமைச் சட்டம் இயற்றியதன் வழியாக பறித்து வீர வேகத்தை துவக்கிவைத்தார்கள் ஆட்சியாளர்கள்.
1956,சூன் திங்கள் 05 ஆம் திகதி தமிழ் இல்லாத .........மொழி மட்டுமே ஆட்சி மொழி என சட்டம் இயற்றி தமிழ் மொழியின் உரிமை பறித்தார்கள். நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் நம்மவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள்.
வாகனங்களின் இலக்கத் தகடுகளில் உள்ள இலக்கங்களுடன் சிங்கள சிறி எழுத்தை இணைக்கும் மோட்டார் வண்டிப் பதிவுச் சட்டம் கொண்டுவந்து மீண்டும் தமிழை பின்னுக்குத் தள்ளினார்கள். 1958 ஆம் ஆண்டு பெரிய அளவில் நடந்த மொழியுரிமைப் போராட்டமும் அதில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளும் வரலாறாகியுள்ளன.
மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்தாலும் கல்வியில் முன்னிலையில் தேர்ச்சி பெற்று பல முக்கியப் பொறுப்புக்களில் தமிழர்கள் சிறப்பாக கடமையாற்றி வந்தவேளையில், 1970 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் முகமது அவர்கள் “தரப்படுத்தல்” என்ற சட்டம் கொண்டு வந்தார். அதாவது, ஒரே நாடான இலங்கையில் அதுவரை கல்வியறிவாற்றலில் சிறந்து விளங்கும் அனைவருக்கும் பணியிடம் என்றிருந்த நிலையை மாற்றி, விகிதாச்சார அடிப்படையில்; பணியிடம் வழங்கப்படும் என சட்டம் இயற்றினார். தமிழர்கள் சிறுபான்மையினர் என்பதால் தமிழருக்கு குறைந்த அளவு விகிதாச்சாரமே தரப்பட்டது. விளைவு, நன்கு படித்து முன்னிலை பெற்றாலும், நமக்கான விகிதாச்சாரம் குறைவானதால் பணியிட இழப்பு உறுதி செய்யப்பட்டது. கற்றறிந்தும் கடையர்களாக்கப்பட்டார்கள். வளரும் தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள்.; நம் முகாமின் இளைய தலைமுறையினர்போல் இல்லாது, நம்நாட்டு மூத்த இளையத் தலைமுறையினர் திறமைக்கு மதிப்பில்லையே என வேகம்கொண்டு ‘தமிழ் மாணவர் பேரவை’ ஆரம்பித்து சத்தியாக்கிரக வழியில் உரிமை வேண்டினார்கள். பிற்காலத்தில் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பித்து போராடினார்கள்.
தமிழ்மொழியும், வேலைவாய்ப்புக்களும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளப்பட்டச் சூழலில் 1972 ஆம் ஆண்டு மே திங்கள் 22 அன்று இயற்றப்பட்ட புதிய குடியரசு அரசியலமைப்புச் சட்டம் முதல் குடிமக்களாகிய நம்மை இரண்டாம் தர குடிமக்களாக்கியது. ஒரு மதம் மட்டுமே ஆட்சி மதமென்றும் இந்து, கிறித்தவம், இசுலாம் அடுத்தநிலை மதமென்றும் சட்டம் சொன்னது. முந்தைய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த உரிமைகளும் புதிய சட்டஅமைப்பில் பறிக்கப்பட்டன.
03.01.1974 முதல் 10.01.1974 வரை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாளான 10.01.1974 அன்று தமிழறிஞர்களும், தமிழார்வளர்களும் கொடுமையாய்த் தாக்கப்பட்டார்கள். ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
மொழி உரிமை, வாழ்வுரிமை, மத உரிமை அனைத்தும் இழந்த பிறகு இழப்பதற்கு வேறென்ன இருக்கிறது என சிந்தித்த இளம் மாணவர்களும், மாணவிகளும், அலுவலகங்களில் கடமையாற்றினவர்களும், அரசியலில் இருந்த சில நல்;ல தமிழ் தலைவர்களும் பலவாறு இணைந்து சத்தியாக்கிரக வழியி;ல் போராடினார்கள். போராட்டம் ஒடுக்கப்பட்டதால் வேதனையின் விளிம்பில் நின்றவர்கள், தாங்கள் அனுபவித்த உரிமையை அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச்செல்ல நினைத்தவர்கள் ஆங்காங்கே இணைந்தார்கள். ஒரே இலக்கினை நோக்கி, தமக்கான போராட்ட முறையைத் தாங்களே தேர்வு செய்தார்கள்.
வேகமும் விவேகமும் சமதளம் கொள்ளும் வரை இழப்புக்கள் அனைத்துப் பிரிவினருக்குமாக இருந்தது. இதில் புரட்சியாளர்கள், ஆதரவாளர்கள், எதிராளர்கள் என எந்த வேறுபாடும் இல்லை. 2008 சூன் 16 இல் செய்தியாளர் மயூரன் கொடுத்தத் தகவலின்படி தாயக விடுதலைக்காக 1982 நவம்பர் 27 முதல் 2008 மே வரை 21,051 பேர் ‘வீர மரணம்” அடைந்திருக்கிறார்கள் இவர்களில் ஆண்கள் 16,516 பெண்கள் 4,535. இது ஒரு பிரிவின் செய்தி மட்டுமே. இதேபோல் காணாமல் போயுள்ளோரும் அதிகம்பேர் இருக்கிறார்கள். 15.08.2007 அன்று அனைத்துலக மன்னிப்புச் சபை தந்துள்ள தகவலின்படி கடந்த முப்பது ஆண்டுகளில் 5,700க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளார்கள். (பதியப்படாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ!).
போராட்டம் உக்கிரம் அடைந்த வேளையில் முடிந்த மட்டும் தாக்குப்பிடித்து இருந்துவிட்டு என் வீட்டிலும் “ஓர் உரிமை விரும்பி” என பெருமையாய் ஒரு மகனையாவது கொடுத்துவிட்டு இடம்பெயர்ந்தவர்கள் இன்று அகதிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் மட்டும் உள்ள 116 முகாம்களில், எழுபத்தைந்தாயிரத்திற்கு அதிகமானோரும், உலகளவில் பதினைந்து இலட்சத்திற்கும் அதிகமானோரும் அகதிகளாக இருக்கின்றார்க்ள்.
இச் சூழலில், எப்படி அகதியாக்கப்பட்டோம் என தன் பிள்ளைக்குச் சொல்லும் பெற்றோர் மண்ணுக்கு மேல் அரிதாகவே இருக்கிறார்கள். 2007 டிசம்பர் 08 அன்று முன்னாள் மறுவாழ்வுத்துறை ஆணையர் திரு. கற்பூர சுந்தரபாண்டியன் அவர்கள் ஆயத்த ஆடை உற்பத்தி மையம் ஆரம்பம் மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் விழாவிற்காக முகாமிற்கு வந்திருநதபோது, நீங்கள் அகதிகளாக இந்தியா வந்து அடுத்த ஆண்டு (இந்த ஆண்டு) இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளிவிழா.........என சொன்னஉடனேயே முகாம் மக்கள் வேகமாக கைதட்டினார்கள்; ஏதோ மகிழ்ச்சியான செய்திபோல. அதிர்ந்துபோன ஆணையர் இந்த ஆண்டிலாவது நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பும் நல்லது நடக்கட்டுமென தொடர்ந்து பேசினார். அன்னிய நாட்டில் நம் பிழைப்பு இப்படித்தான் சிரிக்கிறது.
‘தமிழ் மாணவர் பேரவை’, ‘தமிழர் இளைஞர் பேரவை’ என இணைந்திருந்த மாணவ, மாணவிகளைக் கொண்டிருந்த வீர வரலாறு நமக்கு இருக்கிறதென்றாலும் முகாம்களில் படித்த, படிக்கும் மாணவ மாணவிகள் எத்தணைபேர் இன்றும் இணைந்து நற்செயல் செய்கின்றார்கள், வரலாற்றைத் தேடிப் படிக்கின்றார்கள் என கதைத்துப் பார்த்தால் தோள் நிமிர்த்திய நம்மால் தலை நிமிர்த்தவே முடிவதில்லை. உரிமைக் குடிமகளாஃனாய் பிறந்து அகதியானவர்களே மண்ணுலிப் பாம்பாக வாழும்போது, அகதியாகப் பிறந்த விடுதலை முகாமின் வீரச்சிறார்களை என்னவென்று சொல்லுவது.
வீரமண் பெற்ற வித்துக்களே, இந்த ‘வெள்ளி விழா’ ஆண்டிலிருந்தாவது வரலாறு படிக்க, கேட்க, எழுத உங்கள் குழந்தைகளை, ஆர்வப்படுத்துங்கள், மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் இல்லையென்றால், எதிர்காலம் உங்கள் பிணக்குழிகளையும் தோண்டும், எச்சரிக்கை.
தோழமையுடன்
அருட்சகோதரர் சூ. ம. செயசீலன்

காத்திருப்பு

தமிழினி
வெல்கம் காலனி
சென்னை


உயிர்தப்ப ஊர்விட்டு
பிழைத்த கொடுமை
அறிவூட்டி அனாதையாக்கப்பட்ட
எம்மூர் பள்ளிக்கூடங்கள்
கொள்ளையடிக்கப்பட்டு
கொலையுண்ட
சுற்றத்துக்சகோதரன்
வளம் நிறைந்த
ப+மியில்
விளைந்துகிடந்த
பட்டினிச்சாவுகள்
இப்படி
துளித்துளியாய்
சிதைக்கப்படுகின்ற
எம் தேசம்
மறுகன்னத்தை காட்டி காட்டியே
அலுத்துவிட்டது
இனி
கொஞ்சம் பார்த்துதான்
கால்வைப்பார்கள்
அடிப்பட்ட பாம்புகள்
பல காத்திருக்கின்றன.

--------------------------------------------

நாளைய விடியல்

நேற்று என்பது இறப்பு
இன்று என்பது இருப்பு
நாளை என்பது பிறப்பு
பிறகு ஏன் வாழ்வின் மீது இந்த வெறுப்பு
முயற்சி செய்
வெற்றி உன் விலாசம் தேடி வரும்

சிவனேஸ்வரி
லோனாவிளக்கு

எங்கள் தழிழ்

இயல் இசை நாடக முத்தமிழே
எங்கள் இதயங்கள் பாடும் இன்மதழிலே
ஆதியில் ஆண்ட தமிழ் மொழியே
இன்னும் ஆண்டு சிறக்கும் பொன்மொழியே
மெல்லிய இசையில் உன் புகழை
நம் ஒளவையுடன் பாக்கள் பாடியது
கம்பனின் கவியும் வள்ளுவன் குரலும்
நம் தமிழினை சிகரமாக்கியது
தாய் மடி இன்பம் தருகின்ற அன்னை
தேன் சுவை கொள்ள வைத்திடும தமிழே
கானக மயிலின் தனிப்;புகழ் போலே
காத்திடுவோம் எங்கள் தமிழ்மொழித் தாயை
வீரத்தின் கவியே பாரதி இனிதாய்
உலகத்தின் முடிவாய் வாழ்ந்திடு மொழியே
இன்றின்றி என்றும் வாழிய தமிழே!

சில்வர்ஸ்டார்
ஒக்கூர்


-----------------------------------------------

Monday, August 18, 2008

நண்பன்

தயானன் கோணேஸ்வரன்
லேனாவிளக்கு

உயிர் நண்பனுக்கு உயிரைக்
கொப்பது எளிது ஆனால்
உயிரைக் கொடுக்கும் அளவுக்கு
நண்பன் கிடைப்பது அரிது

------------------------------------------

வாழ்வு செழித்திட கல்வியோடு வாழ்க்கை நெறி தேவை

ஈழகவிதாசன். மா. ஞானசூரி
எடுப்பு: வாழ்க்கையானது செழித்திட கல்வி மட்டுமிருந்தால் போதாது. வாழ்க்கையின் நெறிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். கல்விநெறி இல்லாமல் வாழ்க்கைநெறி சிறப்படைந்ததாக இதுவரை எவரும் கூறியதில்லை அதேபோல் வாழ்க்கை நெறியின்றி கல்விநெறி சிநப்புற்றதாகவும் கூறியதில்லை. சரியான விகிதத்தில் உணவினை உட்கொண்டால் உட்கொள்பவரின் வாழ்நாள் நீடிக்கின்றது. அதுபோல் இருநெறிகளையும் சரியான விகிதத்தில் பெற்றுக்கொண்டால் அந்த வாழ்வு தேவலோகத்தின் அமிழ்தத்தின் இனிமையை விடஇ எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தினை விடஇ தஞ்சையின் பசுமையை விடஇ இனிமையாகஇ உயர்வாகஇ பசுமையாக செழிப்புடன் வளரும்.
தொடுப்பு: கல்விநெறிஇ வாழ்க்கைநெறி இவ்விரண்டும் வாழ்வு செழிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
1. கல்விநெறி:
“ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறம்)
ஆசிரியரை வழிபடுவதனின்றும் தவறாது கல்வியினைக் கற்றல் வேண்டும். கல்வி அறிவை வளர்க்கும் ஒரு சாதனம். கல்வி ஒரு அறிவுப்பெட்டகம். ஆதை அனைவரும் பருக வேண்டும. கல்வியினை தவறாது கற்றல் நன்று என்று புறநானூறு கூறுகிறது. ஆகவே கல்விநெறி வாழ்வு செழிப்படைவதில் ஒன்றாகிவிட்டது.
2. வாழ்க்கை நெறி:
“ பண்புநெறி நட்புநெறி --- மனித நேயம்
நன்றியறிதலோடு நல்லொழுக்கம் - இவை
ஜந்நெறியும் ஒருங்கேபெற்றால
வாழ்வு செழிப்பாகிடும்” (புதுக் கவிதை)
இந்த ஜந்நெறியும் வாழ்க்கை நெறிககு அவசியமென புதுக்கவிதை ஒன்று சுட்டுகின்றது.
பண்புநெறி: கல்விநெறியுடன் பண்புநெறியையும் கற்றுக்கொண்டதால் பண்டைத் தமிழர்கள் ‘பண்புடையோர்கள்’ என போற்றப்படுகின்றனர். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பண்பு நெறியினால்தான் அந்நாடு சிறப்பாக பேசப்படும். பண்புநெறி விலங்புகளுக்கும் இ மனிதர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் காட்டுகின்றது.
“ பாடறிந் தொழும் பண்பினாரே” (புறம்)
உலகத்தாரோடு இணைந்து வாழும் மக்களை பண்புடையவர்கள் என புறநானூற்றுப் பாடல் கூறுறகிறது.
“அரம்போலும் கூர்மைய ரேனும்மரம் போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்” (குறள்)
என பண்பில்லாதோரை மரத்துக்கு ஒப்பாக வள்ளுவர் சாடுகிறார்.
இசையில்லாத பாடல் சிறப்பாக அமையாது. அதுபோல் பண்பாடு இல்லாத மனிதர்களும் சிறப்பாக பேசப்படமாட்டார் என்பதற்கு இக்குறள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
“ பண்என்னாம் பாடற்கு இவையபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இலாத கண்” (குறள்)
தமது தலையில் நரை தோன்றாமைக்கு தாம் வாழும் ஊரில் பண்புடையோர்கள் பலர் வாழ்வதே காரணமென பிசிராந்தையார் கூறுவதிலிருந்து பண்புநெறியின் சிறப்பும் அவசியம் புலப்படுகின்றது.
2. நட்பு நெறி: : நட்பு மனிதப் பண்பாடுடன் கலந்துவிட்ட ஒரு வாழ்வியல் நெறி. மனிதநேயம் மலர நட்பு ஒரு சிறந்த வழிகாட்டி தனிமனிதன் சமுதாயத்தோடு இணைவகற்கு நட்பு உதவி செய்கின்றது வாழ்க்கை நெறியில் நட்புநெறி தனியொரு சிறப்பைப் பெற்றுள்ளது. வள்ளுவர் தமது குறளில் நட்புக்கு இலக்கணம் வகுத்து தனிஒரு அதிகாரத்தை நட்பு நெறிக்காக எழுதியிருப்பது நட்பின் நெறிப்பாட்டைக் காட்டுகின்றது.
“உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள்)
இக்குறள் நட்பின் நெறிப்பாட்;டை உயர்த்திக் காட்டுகிறது.
பண்டைத் தமிழர்கள் தம்கண்போல் நண்பரை மதித்தனர். அவர்களுடன் கலந்து பழகிப்பெறும் மகிழ்ச்சியை இனியதாகக் கருதினர்.
“ முந்தை யிலிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்;” (நற்றி)
என்ற நற்றிணைப் பாடலடி நட்பினை மதிக்கும் மனப்பான்மையையும் நண்பர்களின்பால் கொண்ட நன்னம்பிக்கையையும் உயர்த்திகின்றனர். இதே நட்பினை நாலடியாரும்
“ சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப் படு வார்” (நாலடி)
என்ற பாடல் மூலம் நட்புநெறியை உணர்த்துகிறாhர்.

“ உலகம்………. ஃ இன்பமுடன வாழவும் ஃ அன்புடன் வளரவும் ஃ அமைதி நிலைபெறவும் மனிதா ஃ ஈயடா பெட்டவுடன் ஃ நன் நட்பே!” (புதுக்கவிதை)
3. மனித நேயம்: மனிதரின் உள்ளத்தின் அடிமனதிலிருந்து வெளிப்படுகின்ற உண்மையான அன்பே மனிதநேயம் ‘ நேயம்;’ என்பது நாம் வாழ்வதற்கும் பிறரை வாழ்விப்பதற்கும் அடிபடையான பண்பாகும். மனிதநேயம் என்பது இனம் நாடு மொழி என்ற எல்லைகளுக்கட்பால் உயர்ந்து நிற்கும். மனிதநேயம் பற்றி சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
உலகம் ஒன்றே உலக மககள் அனைவரும் உறவினர் என்று கூறுகின்றார்.
வேடர்குலத்தில் பிறந்தவனையும் இ வாரைகுலத்தில் பிறந்தவனையும் இ அரக்ககுலத்தில் பிறந்தவனையும் இ இராமன் தனது சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட மனிதநேயப் பண்பாட்டை மனிதநேயம். சகோதரத்துவமாக மலர்ந்ததை கம்பராமாயணம் யுத்தகாண்டத்தில் விளக்கி காட்டியுள்ளது மனிதநேயத்தின் சிறப்பை சுட்டிக்காட்டுகின்றது.
“ மதவெறி பூசலை ஃ நிறுத்திப் பார் ஃ மாதம் மும்மாரி பொழியும் ஃ இனவெறியை இடித்துரைத்துப் பார் —நீ ஃ இகழ்ந்தவருடன் நேசம் ஃ வளர்வது காண்பாய் மனிதா!” (புதுக்கவிதை)
3. நன்றியிதல்: பிறர் செய்த நன்மையை மறவாது வாழும் பண்பு நன்றியறிதல் எனப்படுகின்றது. நன்றியறிதல் என்பது ஒருவர் நமக்குச் செய்த நன்மைக்கு ஈடாக மீண்டும் நன்மை செய்வதல்ல. தகுந்த காலத்தில் பயன் கருதாது நமக்கு நன்மை செய்யாதவருக்கும் நாம் நன்;மை செய்தலே நன்றியறிதல் ஆகும். சங்ககால மக்கள் நன்றிக்கடனை போற்றி வளர்த்தனர் நன்றி மறத்தலை தீமை என்று கருதினர் ஆன்முலையறுத்தல் கருச்சிதைத்தல் அந்தணர்க்கு கொடுமை செய்தல் இவற்றையெல்லாம் விட மிகப்பெரு;ங கொடுமை நன்றி மறப்பதே என்று புறநானூறு எனும் நூல் கூறுகின்றது.
தன் துன்பத்தில் உதவிய ஒருவற்கு உதவாது செய்ந்நன்றி மறந்தானின் செல்வம் தானாகவே கெட்டழியும் அவன் நரகத்தின்கண் செல்வான் என்று வள்ளுவர் கூறுகிறார்.
“ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்)
தமக்கு ஒருவர் உதவி செய்தால் அவருக்கு எவ்வகையிலாவது கைம்மாறு செய்திட வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பெருமையாகக் கருதியவர்கள் நம் முன்னோர்கள் இதனை
“ முன்னொன்று தகக்காற்றி முயன்றவர் இறுகிக்கண்
பின்னொன்று பெயர்தாற்றும் பீடுடையாளர்” (கலித்)
என சங்க இலக்கியமான கலித்தொசை எடுத்துரைக்கின்றது.
3. ஒழுக்கம்: ஒழுக்கமுடைய வாழ்Nவு சிறந்த வாழ்வு உயர்ந்த வாழ்வு. அறிவும் ஒஐக்கமும் உடைய சான்றோர்களின் ஒழுக்கலாறுகளை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வதே மனிதருக்குரிய கடமையாகும் ஒழுக்கநெறி தவறியோரின் வாழ்வு சிறப்படைந்ததாக சரித்திரம் இல்லை.
மணிஇ பொன் இ முத்து இவற்றிலான அணிகலன்கள் பழுதடைந்தால் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் எனும் நெறியானது பழுதடைந்தால் அவற்றை சரிசெய்வதென்பது இயலாதகாரியம் ஆகும்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும் (குறள்)
ஒழுக்கம் மேன்மையையும் இன்பத்தையும் நல்வல்லது. நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாக அமையும். தீய ஒழுக்கம் பழியையும் துன்பத்தையும் தரும் என்கிறார் வள்ளுவர்.
“கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை” (தொல்)
ஒழுக்கநெறியை உள்ளத்தில் அமைத்து அறநெறியில் நிற்றல் வேண்டும என்று கூறுகின்றது தொல்;காப்பியம் நல்லொழுக்கம் பண்பட்ட வாழ்வியல் நெறியாகும்.
முடிப்பு:
இவை ஜந்நெறியும் வாழ்க்கை நெறியின் ஜம்புலன்கள். இதில் ஏதேனும் ஒரு புலன் கெட்டுப்போனால் அவன் முழு மனிதனாக முடியாது. ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இவை ஜந்நெறிகளும் இன்றியமையாதவைகள்.
கல்வியில்லாத வாழ்க்கைநெறி துடுப்பு இல்லாத படகிற்குச் சமமாகும். வாழ்க்கை நெறியின்றி வெறும் கல்வி மட்டும் பெறுதல் சிறகு இல்லாத பறவைக்குச் சமமாகும். படகானது கரைசேர துடுப்பு மிக அவசியம். அதுபோல் மனிதன் தனது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு கல்வி மிக அவசியம். பறவையானது உயரே பறப்பதற்கு சிறகு மிக அவசியம் . மனிதனும் தனது வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதற்குமம் பிறரோடுஇ பழகுவதற்கும் வாழ்க்கைநெறிகள் இன்றியமையாததாகின்றது. எனவே ஒவ்வொருவருடை வாழ்வும் செழிப்படைவதற்கும் உயர்ந்து விளங்குவதற்கும் கல்வியோடு வாழ்க்கைநெறியும் அவசியமே.

“ சங்கே முழங்கு! ஃ வானுலகம் வாழ்த்திடவும் ஃ வையகம் போற்றிடவும் ஃ வளமான வாழ்வக்கு —— கல்வியோடு ஃ வாழ்க்கைநெறி தேவையெ ஃ சங்கே முழங்கு!” (புதுக்கவிதை)
குறிப்பு:2004 இல் சென்னை தெய்வத் தமிழ்ச்சங்கம் நடாத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது

ஈழத்து காந்தியின் சிறப்புகள்

(தந்தை செல்வா)

செல்லமாக ஒரு செல்வா
சிறப்புற பாரினிலே
செழிப்புடனே வாழ்ந்தாரைய்யா
செவியின்பம் குறைந்திடினும்
செப்புகின்ற சொல்வன்மை
திறமுற பெற்றாரைய்யா
செழிப்புற ஒரு
தேசியம் காண எண்ணி
முழுமுச்சாய் உழைத்தாரைய்யா
இலக்குமிகுந்த உரிமைகள்
இன்னதென்று எடுத்துரைக்க
பாராளுமன்றமும் சென்றாரைய்யா
விடுதலைக்கு மார்க்கமுண்டு
என்றிருக்க
நம் தந்தையை காலதேவன்
வந்தணைத்துக் கொண்டானையா
தூர் அதிஸ்ட வசத்தாலோ
தூயவரை நாமிழந்தோம்
விடிவுகாண அவர் ஆன்மா
நம்மூடனே இருக்குதைய்யா

பி.ப யோகா
வாழவந்தான் கோட்டை

சுதந்திர தேசம் படைப்போம்

ம. மரியசெல்வி
வாழவந்தான் கோட்டை


பசுமையான இயற்கையில்
இன்னிசை பாடும் பறவைகளே
கடலில் துள்ளி விளையாடும்
மீன்களே
சுதந்திரமாக பறந்து
திரியும் சுதந்திர பறவைகளே
என்னை போல்
உன்னை கூட்டிற்க்குள்
அடைத்தது யார்?
கடலின் ஆழத்தில் மூழ்கி
இருவரும் சேர்ந்து
கூட்டை விட்டு
சுதந்திரமாய் பறந்து செல்வோம் வா
சூரிய ஒளியை எதிர்த்து
வெப்பக் கடலில் நீந்தி
சுதந்திரமாய் வாழ
சுதந்திர தேசத்தை படைப்போம் வா

---------------------------------------------

நாவலர் மன்றம்

(நாவலர் உள்ளே வருகிறார்)
மாணவர்கள் :வணக்கம் நாவலரே!
நாவலர் :வணக்கம். தோரணமெல்லாம் கட்டி நாவலர் மன்றமே கலைகட்டிருக்கு.
தமிழினி :ஓம் நாவலரே, நம் வேர்விடும் நம்பிக்கை இதழ் 29.07.2008 அன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதுதான் இந்த ஆரவாரம்.....
நாவலர் :ஓம். நம் வேர்விடும் நம்பிக்கை இதழினால் இந்த ஓராண்டிலே பலபேர் எழுத்தாளராக உருவாகியிருப்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. சரி, இந்த மாத எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா?.
பூங்குன்றன் :ஓம். கே.கணேஷ் அவர்களின் பெற்றோரும், மூதாதையரும் திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் என்ற சிற்றூரில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். மலையகத் தமிழர்கள். கண்டியை அடுத்துள்ள அம்பிட்டிய என்னும் இடத்தில் உள்ள தலைப்பின்னாவ என்னும் தோட்டத்தில் தான் கே.கணேஷ் அவர்கள் பிறந்தார்.
பூவிழியாள் :நாவலரே அய்யா அவர்கள் 02.03.1920 அன்று திரு.கருப்பண்ணன்-திருமதி வேளுரம்மாள் அவர்களின் மகனாகப் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சித்திவிநாயகம். வீட்டில் அழைத்தப் பெயரே நிலைத்துவிட்டது. தோட்டத்து எல்லையிலிருந்த பெண்கள் பள்ளியில் சிங்கள மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆனாலும் அவரது அம்மா தேவார திருவாசகங்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைக் கற்றுத்தந்ததோடு தமிழ்நாட்டில் இருந்து அஞ்சல் வழியாக பல நூல்களைப் பெற்று படிக்க வைத்துள்ளார்.
நாவலர் :ஆகா.....ஆரம்பமே படு வேகமாக இருக்கு.....

கனியன் :ஓம் நாவலரே, இடைநிலைக் கல்வியை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆங்கிலத்தில் படித்துள்ளார். ஆனாலும் தமிழ்மொழியில ஆர்வம் இருந்ததால 1934 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கம் வந்து தமிழ் கற்றிருக்கார்.
நாவலர் :மிகச் சரியாச் சொன்னீங்க....இந்தியாவுல இருந்தபோது, ஜெய்;ப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “அபேதவாதம் ஏன்?” (றூல ளழஉழைடளைஅ?), ஜவஹர்கலால் நேரு எழுதிய “இந்தியா எங்கு செல்கிறது” (றூiவாநச ஐனெயை), சுபாஷ் சந்திர போஸ் எழுதிய “சாம்ய வாதம்” ஆகிய நூல்களை வாசித்து இடதுசாரிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். அபேதவாதக் கட்சியில் ராமண்ண சாஸ்திரியுடன் அய்யாவுக்குத் தொடர்பு இருந்ததால் இந்திய ரகசிய காவலர்கள் தமிழ்ச்சங்கத்தில் சென்று விசாரித்திருக்கிறார்கள். அவ்வளவுதான் கல்லூரியிலிருந்தே நீக்கிட்டாங்க..
குழலினி :அப்படியா.....படிப்பு பாதியிலே போயிருக்குமே.....
நாவலர் :இல்ல...இல்ல....திருவையாறு அரச கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்து விட்டு 1938-ல் இலங்கைக்குத் திரும்பி வந்துவிட்டார். சிங்களம், தமிழ், ஆங்கிலம், கற்ற கே.கணேஷ் அவர்கள் தமிழ் எழுத்துலகத்திற்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
பனிமலர் :ஓம் நாவலரே... தமிழ்நாட்டில் இருந்த ஆனந்த போதினி என்ற இதழில் 1932-ல் முதன் முதலில் அறம் செய்ய விரும்பு என்று கட்டுரை எழுதியவர், டாக்டர் வரதராஜ் அவர்களின் தமிழ்நாடு வார இதழிலும், 1935-ல் மாதர் மறுமணம் என்ற இதழிலும், சென்னையில் வெளியான லோக சக்தி, மணிக்கொடி, போன்ற இதழ்களிலும் எழுதியுள்ளார்.
நாவலர் :நிறைய தகவல்களைச் சேகரித்துள்ளீர்கள் நன்றி. மேலும், கலா மோகினி, கிராம ஊழியன், சிவாஜி, சக்தி, ‘னுமான், ‘pந்துஸ்தான் ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார்.
மகிழன் :கே.கணேஷ் அவர்கள் தனது சொந்தப் பெயரிலும், சித்தார்த்தன், கே.ஜி, மலைமகன், கலாநேசன், கணேசு ஆகிய புனைப்பெயரிலும் எழுதியுள்ளதாக எங்கள் மாலைப் பள்ளி ஆசிரியை சொன்னாங்க நாவலரே...
நாவலர் :உண்மைதான். அய்யா அவர்களின் எழுத்துப் பணிகளில் முக்கியமானது பிற மொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தது என்றால் மிகையில்லை.
அகலிகை :அய்யாவின் மொழி பெயர்ப்பைப் பற்றி சொல்லுங்க நாவலரே!
குழலினி :நாவலரே நான் சொல்றேன். அய்யா அவர்கள் மொழி பெயர்த்த ஒரே நாவல் தீண்டாதவன் (ருவெழரஉhயடிடநள) (1947). மேலும் அஜந்தா(1964),அந்த கானம்(1974), இளைஞன் எர்கையின் திருமணம்(1990), கூனற் பிறை(1990), உடலும் உணர்வும்(1992) ஆகிய அய்ந்து குறு நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு நூலுருப் பெற்றுள்ளன. உடலும் உணர்வும் நூலில் ஒரு மந்தையோட்டியின் கதை, ஒரு பாரப்பேருந்து ஓட்டுனரின் கதை என இரண்டு குறு நாவல்கள் இணைந்துள்ளன.
நாவலர் :அமைதியா இருக்கீங்க கைதட்டி பாராட்டுங்க......(எல்லாரும் கைதட்டல்). ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு குழலினி. அய்யா அவார்களின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. யாராவது சொல்றீங்களா.....
மகிழன் :நான் சொல்றேன். வட இந்திய எழுத்தாளரும், அகிழ இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமான கே.ஏ.அப்பாஸ் அவர்களின் பத்து சிறுகதைகளை மொழிபெயர்த்து குங்குமப் பூ(1956,1963)என வெளியிட்டார். லூசுன் என்ற சீன எழுத்தாளரின் சிறுகதைகளை மொழிபெயர்த்து போர்க்குரல்(1981), சீன எழுத்தாளர் லூசுன் சிறுகதைகள்(1988), பிறகு இவை இரண்டையும் இணைத்து சீன அறிஞர் லூசுன் சிறுகதைத் தொகுப்பு(1995),மற்றும் மூங்கிற் பள்ளம் (வியட்நாமியச் சிறுகதைகள்,1992) ஆகியன வெளியிட்டுள்ளார்.
நாவலர் :பாராட்டுக்கள்.....பாராட்டுக்கள்....(எல்லோரும் கைதட்டுதல்). கணேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. யாரு சொல்றா....
பூவிழியாள் :நான் சொல்றேன் நாவலரே. N‘hசிமின் சிறைக் குறிப்புகள்(1973,1985), பல்கேரியக் கவிதைகள்(1984), ஒரு சோவியத் கவிஞனின் புதுக்கவிதைகள்(1989), எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே(1988), பாரதி பக்தன் பார்பரா கவிதைகள்(1989), உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சேன்கோ கவிதைகள்(1993), உக்ரேனிய அறிஞர் இவன் ஃபிரான்கோ கவிதைகள்(1994) போன்றவைகள் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள் நாவலரே.
நாவலர் :ரொம்ப மகிழ்ச்சி. பாராட்டுக்கள். (எல்லோரும் கைதட்டுதல்).கே.கணேஷ் அவர்கள், இன்றைய எனது கடமைகள்(1990), மகிழ்ச்சிமிகு குழந்தைகள்(1986), சொந்த வேலையில் சுகம்(1990) மற்றும் ஷிகானும் நத்தையும் என நான்கு சிறுவர் இலக்கிய நூல்களும் மொழிபெயர்த்துள்ளார். இதைத் தவிர்த்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியுள்ள கணேஷ் அவர்கள் இந்தியாவில் ‘தென்றல்’, ‘நவசக்தி’, ‘பாரதி’,போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். நம் நாட்டு வீரகேசரி இதழில் 1949 இல் துணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
கனியன் :நம் தமிழ்மொழிக்கு மிகஉயரியத் தொண்டாற்றியுள்ள கே. கணேஷ் அவர்களை இந்த மாதம், அதுவும் வேர்விடும் நம்பிக்கை இதழின் இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்திலே அறிந்துகொண்டோம் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
நாவலர் :சரி, அடுத்தமாதம் நாவலர் மன்றத்தில் காப்பியங்கள் பல தந்த கவிஞர் ஜின்னா அவர்களைப்பற்றி தெரிந்து கொள்வோம். எல்லோருக்கும் நன்றி;.
மாணவர்கள் :நன்றி நாவலரே.

மாணவச் செல்லங்களே! கவிஞர் ஜின்னா‘; அவர்களைப் பற்றியத் தகவல்களைச் சேகரித்து அனுப்புங்கள்.

தாய்

பவித்திரா சுதா
லோனாவிளக்கு


ஜயிரண்டு திங்கள் தவமிருந்து
என்னைப் பெற்றெடுத்தவளே நெற்மணி கொண்டு
என் நெஞ்சைத் துடிப்பை நிறுத்திடாதே
கள்ளிப்பால் கொடுத்து கொல்லாமல் காத்தவளே!
பூவாய் இந்தப் பூமியில் என்னைப் பூக்கச் செய்தவளே!
எப்பிறவியில் தீர்ப்பேன் என் நன்றிக் கடனை

நட்பு

ம. மைக்கில் ராஜ்
வாழவந்தான் கோட்டை


நண்பா
வானத்தைப் பார்த்தேன்
நிலவைத் தேடி
கடலைப் பார்த்தேன்
அலையைத் தேடி
மழையைப் பார்த்தேன்
வானவில்லை தேடி
உன்னைப் அடைந்தேன்.
நட்பை நாடி

-----------------------------

அழியாத அகதிகள்

சியாம்சன்
ஒக்கூர்


என் இதய ஈழமே
என் உயிர் மூச்சு
என்று உன்னைச் சேரும்
என் விழிகள் தேம்பிய காலம்;
என்று மெல்ல மெல்ல போகும்
இந்த இந்திய தேசத்தில்
நாம் என்ன இரவல் மக்களா?
ஒரு பள்ளி செல்லாமலே
நமக்கென்ன அகதிப்பட்டமா?
ஒரு முற்றுப் புள்ளிக்குள்
முடிந்திடாத வார்த்தை போலவே
நம் முகவரி தொலைந்த
இந்த வாழ்க்கை தொடருமா?
அங்கு எரியும் ஈழத்தை
அனைத்திட மழை சாரல் போடுமா?
நம் அடிமை வாழ்க்கையை உடைத்திட
புது விடியல் பிறக்குமா?
என்னும் அழியாமல் தொடரும்
நம் அகதிப்பட்டம் அழியுமா?

------------------------------------------------

வெ. சாரதா

வாழ்க்கை என்பது போர்
அதில் வாழ்வது எளிது
வளர்வது கடினம்!
இழப்பு என்பது வறுமையிம் வறுமை
என் தாய் நாட்டை இழந்தது போல
பெண் என்பவள் தீயில் குத்து விளக்கு
கோபத்தால் அவள் ஆவாள் தீ விபத்து
பள்ளி எனும் பூங்காவில்;
பட்டாம் பூச்சி போல
கல்வி என்னும் பறவையில்
என்றும் பிரியாதது நம் நட்பு
இவையெல்லாம் இனைவது பல்சுவை
இதழ்
பல்சுவை இதழிலும் இனியது நம் இதழ்
அதை உயர்த்துவது நம் கடமை
தோழா ஓன்றுபடு
வாழ்வில் உயர்ந்து இழப்பை மீட்டு
பெண் வீரத்தை உணர்ந்து நட்பு என்னும்
பண்பை வளர்த்து நம் இதழை
உயர்த்துவோம் நாமும் உயர்வோம்


------------------------------------------

புலம்பெயர்ந்தோர் கவிதை

இளங்கவி ஈழபாரதியின்

புலம்பெயர்ந்தோர் கவிதைகள் பெரும்பாலும் ஈழம் சார்ந்து பேசப்பட்டு வந்தாலும் வாழ்வியல் தன்மைகளில் பொது நிலைகளையும் அரவணைத்தே வந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக கவிஞர் பன்னீர் செல்வம் அவர்களின் “ ஒரு சாலையின் சரிதம்” மனித வாழ்வின் துன்ப நிலைகளின் சரித்திரமாகவே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.“
தங்கச்சிக தலையெழுத்து
கரைசேரும் காலம் வரை
பூமியிலே நானொருத்தி
பூப்படைய வேணாமுங்க” !
இன்றைய காலகட்டத்தில் தொடரும் வரதட்சனை பிரச்சனைகளையும் வீட்டில் எல்லாம் பெண்குழந்தைகளாய் இருந்தால் ஏற்படும் வலி பிரசவ வலியை விட அதிகமானதுதான்.கவிஞர் பெண்ணியம் பற்றி மட்டும் அல்ல தலித்தியம் பற்றியும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
“எங்கள் ஊரில் இன்றுவரை
இரட்டைக் குவளை உண்டு
செருப்பணிந்த கால் மறுக்கும்
தெருக்கள் பல உண்டு
தீட்டுப்பட்ட மனிதன்
நுழையா திருக்கோயில்கள் உண்டு!”

இவ்வுலகில் மனிதராய் பிறக்கும் அனைவருமே உணவு உடை இருப்பிட் கல்வி இவைகளை நிறைவாகப் பெற்று வாழ உரிமை உண்டு என்று “இரண்டாம் வத்திக்கான் சங்கம்” நமக்கு பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அதே போன்று ஜ.நா. சபையும் அடிப்படை உரிமைகள் பற்றியும் மனித உரிமை மீதல்கள் பற்றியும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.
ஆலயங்களில் ஆண்டவணை வழிபடுவதற்குக் கூட சாதியின் பெயரால் தடை விதிக்கப்படுகின்றது. குறிப்பாக அரியனா மாநிலத்தில் பல்லாறுக்கு அருகிலுள்ள பத்ரம் என்ற கிராமத்தில் தலித் மக்களின் கோயில் ஒன்று உயர்சாதி அனத்தவர்களால் இடிக்கப்பட்டு உணவு கூட கொடுக்கப்படாமல் சித்திரவதைச் செய்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் கண்டதேவி தச்சூர் ஆரண்கண்டிகை போன்ற இடங்களில் தலித் மக்களுக்கு வழிப்பாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுமனித உரிமை மீறல்களின் உச்சம் எனலாம். இதைவிட கொடுமையானது இரட்டை குவளை முறை இன்னும் ஒரு சில இடங்களில் தொடர்வதுதான். கடலூர் மாவட்டத்தில் 16 கிராமங்களிலும் திண்டுக்கல் மாவட்த்தின் ஒரு சில இடங்களில் இன்னும் நடப்பில் உள்ளது. தந்தை பெரியாரின் போராட்டம் இன்னும் தொடர வேண்டியே உள்ளது.
உயர்சாதிப் பெண்ணை தலித இளைஞன் நேசித்தாலோ இல்லை தலித் இளைஞனை உயர்சாதிப் பெண் நேசித்தாலோ பாதிப்பு என்னவோ தலித் இளைஞனுக்குத்தான்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டத்திற்கு மலம் திணிப்பது நிர்வாணமாக்குவது என்று இன்னும் தொடர்கிறது. சாதிய ரீதியான வன்முறைகளும் அடக்குமுறைகளும் இந்த வலி கவிஞரின் கவிதையிலும் இப்படி….
“ காதலர்கள் வாயில்
மலத்தைத் திணிப்பதா
அல்லது
பெற்றவர்களை நிர்வாணமாக்கி
ஒடவிடுவதா
இல்லை இவர்களை
ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதா?
சாதியப்பாகுபாடுகள் தமிழகத்தில் தலைதூக்கி இருந்தாலும் ஈழம் மற்றும் தமிழகப் புலம்பெயர்வு மக்களை பொறுத்த வரையில் போராட்ட வாழ்வில் சாதியம் தொலைந்து போனாலும் முழுமையாக ஒழிந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது.
ஒரு கவிஞரின் கைக்கூ இப்படி விரிகிறது.
“கணிணி யுகத்திலும்
கல்யாணப் பேச்சில்
ஜாதி”
புலம்டிபெயர்ந்த மக்கள் மத்தில் சாதிய வேறுபாடுகள். இல்லை என்று கூறி விட முடியாது கல்யானப் பேச்சில் இருக்கத்தான் செய்கிறது. அதே வேளை ஈழத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்தின் கிராமங்களில் தனிச் சமூகமாக வாழ்ந்தவர்கள் இங்கு ஒன்றாக கலந்து ஒரே சமூகமாக வாழ்வது இடம் பெயர்வின் நன்மைகள் என்றே கூறலாம்.
முனித உரிமை மீறலில் முதலிடம் வகிக்கும் நாடு “ இலங்கை” என்று தற்போது ஊலக நாடுகள் தெரிவித்து வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து துன்பங்களையும் மனித உரிமை மீறல் என்றே குறிப்பிடலாம்.
ஊலக அகதிகளுக்கான ஜ. நா. சபையின் ஒப்பந்தத்தில் இந்தியா கையொழுத்து (ஒப்பந்தம்) இட்டு இருந்தால் மனித உரிமை மீறலுக்கான நிலைப்பாடு குறித்து உலக நாடுகளும் ஜ.நா.(அகதிகள் பிரிவு) சபையும் ஒருவேளை பேசியிருக்கலாம். போர்கால சூழல் காரணமாக புலம்பெயர்ந்த அகதிகளை தனது நாட்டுக் குடிமக்களுக்கு மேலாக பாதுகாக்க வேண்டும் என்பது ஜ.நா. சபையின் வேண்டுகோள் என்பதையும் இங்கு மறந்து விட முடியாது.
வலியோடு தொடர்வோம்

--------------------------------------------

பேரழகு

சியாமினி
ஒக்கூர்


மழலைச் சிரிப்பு
மயங்க வைக்கும் நிலா
கைகளில் சிரிக்காத தென்றல்
தாயின் எல்லையற்ற அன்பு
தந்தையின் கருணை உள்ளம்
சகோதரனின் சீண்டல்
காதலனின் குறும்பு
இவற்றோடு இணைந்த
தோழனின் அரவணைப்பு
இறைவனின் படைப்பில்
இவையாவும் பேரழகு!

------------------------------------------------

மண்ணும் மறத்தமிழும்

-- ஈழக்கவிதாசன் மா.ஞானசூரி
அறந்தாங்கி


மண்ணின் மணத்தினை
மறந்து போய்விடுவோமோ?
பல ஆண்டுகளாய்
அகதி வாழ்க்கையில் - ஈழ
மண்ணின் மணத்தினை
மறந்து போய்விடுவோமோ?

யாழ் மண்ணின்
கதகதப்பும்
வன்னி மண்ணின்
தகதகப்பும்! - எமது
அடுத்த தலைமுறைகள்
அனுபவிக்க வேண்டுமே!

ஈழ மண்
ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல -
உலகத்
தமிழினத்திற்கே அடையாளம்
எங்கள் அடையாளத்திளை
பறிக்க எவர்வந்தாலும்
பொங்கியெழத் தயங்கோம் -
கயவர்களை
பொசுக்காது திரும்பிவரோம்!
இறைவா!
சுதந்திர உணர்வையும்
சுத்தமான தழிழையும் - எமக்கு
குன்றாது கொடுத்தருளும்!
மண்ணும் மறத்தமிழும்
மாசில்லாது வாழட்டும்!

-----------------------------------------------

பெண்மை வெல்க

ச. சதீஸ்
லோனாவிளக்கு


கல்வி வளரஒரு கலைமகளை கைநிறையச்
செல்வம் பெருக்க ஒரு திருமகளை நாடியவன்
நதிகளையும் தான்பிறந்த நாட்டினையும் பெண்பாலம்
மதித்துப் பெயர்சூட்டி மனமுருகிப் பாடியவன்
அன்புக் காட்டுவதில் ஆத்ம சுகமடையம்
பெண்னை உணராமல் பெரும்பாடுபடுத்துகிறான்
எல்iலையிலாக் கொடுமைகளை எத்தனைநாள் - தாங்குவது
ஆர்தெழுவோம் பார்த்திடுவோhம் இனியார்கை ஓங்குவது
கொல்லட்டும் எனத்தலையைக் கொடுத்ததெலாம் - போதுமினி
வெல்லட்டும் பெண்;மை என விழித்தரல் கேட்கிறது

--------------------------------------------

வேர்விடும் நம்பிக்கை முதலாம் ஆண்டு விழா புகைப்படங்கள்