Monday, August 18, 2008

மண்ணும் மறத்தமிழும்

-- ஈழக்கவிதாசன் மா.ஞானசூரி
அறந்தாங்கி


மண்ணின் மணத்தினை
மறந்து போய்விடுவோமோ?
பல ஆண்டுகளாய்
அகதி வாழ்க்கையில் - ஈழ
மண்ணின் மணத்தினை
மறந்து போய்விடுவோமோ?

யாழ் மண்ணின்
கதகதப்பும்
வன்னி மண்ணின்
தகதகப்பும்! - எமது
அடுத்த தலைமுறைகள்
அனுபவிக்க வேண்டுமே!

ஈழ மண்
ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல -
உலகத்
தமிழினத்திற்கே அடையாளம்
எங்கள் அடையாளத்திளை
பறிக்க எவர்வந்தாலும்
பொங்கியெழத் தயங்கோம் -
கயவர்களை
பொசுக்காது திரும்பிவரோம்!
இறைவா!
சுதந்திர உணர்வையும்
சுத்தமான தழிழையும் - எமக்கு
குன்றாது கொடுத்தருளும்!
மண்ணும் மறத்தமிழும்
மாசில்லாது வாழட்டும்!

-----------------------------------------------

No comments:

Post a Comment