Monday, August 18, 2008

பெண்மை வெல்க

ச. சதீஸ்
லோனாவிளக்கு


கல்வி வளரஒரு கலைமகளை கைநிறையச்
செல்வம் பெருக்க ஒரு திருமகளை நாடியவன்
நதிகளையும் தான்பிறந்த நாட்டினையும் பெண்பாலம்
மதித்துப் பெயர்சூட்டி மனமுருகிப் பாடியவன்
அன்புக் காட்டுவதில் ஆத்ம சுகமடையம்
பெண்னை உணராமல் பெரும்பாடுபடுத்துகிறான்
எல்iலையிலாக் கொடுமைகளை எத்தனைநாள் - தாங்குவது
ஆர்தெழுவோம் பார்த்திடுவோhம் இனியார்கை ஓங்குவது
கொல்லட்டும் எனத்தலையைக் கொடுத்ததெலாம் - போதுமினி
வெல்லட்டும் பெண்;மை என விழித்தரல் கேட்கிறது

--------------------------------------------

No comments:

Post a Comment