Friday, June 13, 2008

ஈழகவிதாசன். மா. ஞானசூரி

---------------------------------

உயிருள்ளவை அனைத்தும் உணரும் நிகழ்வே வலியாகும். வலி என்பது இப்படியானது அப்படியானது என விளக்கிக் கூற முடியாது. அவற்றை ஒவ்வொருவரும் உணர்ந்தால் மட்டுமே முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்புவியிலும் பிறந்த மனிதர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வலிக்கு ஆட்பட்டுச் செல்கிறார்கள். ஒரு சாரார் வலிகளை தோற்றுவிக்கிறார்கள். இந்த 21- ஆம் நூற்றாண்டிலும் விஞ்ஞானம் வேகமாக வளர்ச்சியடையும் காலத்திலும் மனிதன் வலிகளுக்கு ஆட்படுவது விந்தையாகத்தான் உள்ளது. தாய்க்குத்தான் தெரியும் பிரசவத்தின் வலி. பின்பு அவள் மழலையின் குரல் கேட்டதும் தன் வலிகளை மறந்து போகிறாள். ஏன் ஈழமண்ணை பிரிந்து வாழும் நாமும் இந்த தாய்மைக்கு ஈடானவர்கள்தான். ஆனால் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளான தடுப்பூசிக்கு குழந்தைகள் பலி, தாமதமான பிரசவத்தினால் தாய் இறப்பு, குழந்தைகள் காணாமல் போதல், சிறுநீரக மோசடி, மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் செய்த போராட்டங்கள். வலிகளை தோற்றுவிப்வைகளாகவே உள்ளன. சமீபத்திய ஆய்வுப்படி 100 இல் ஒரு பிரசவம் இறப்பில் முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறை பல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கேதான் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இந்த உலகில் உயிரோடு உலாவரும் தெய்வங்கள் மருத்துவர்கள்தான். நம் தமிழ்ப்பெண்கள் கணவனைத் தவிர வேறு ஆண்களை தம்மை தொட அனுமதிக்காதவர்கள் மருத்துவ தெய்வத்தை அனுமதிக்கிறார்கள். ஆனால் இன்று அத்தெய்வங்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. சிறுநீரகக் கொள்ளையர்களாகவும் மன்மத சாமியார்களாகவும் அவதாரம் எடுத்து ஆடுகிறார்கள். இவர்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கிராமங்களில் சேவைசெய்ய எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்ம் உண்ணாவிரதம் மறியல் என போராட்டங்களை நிகழ்த்தியது வேதனையான நிகழ்வு. அரசின் மருந்துக்கு உள்ள வீரியம் அரசு மருத்துவர்களுக்கு இல்லாது ஏன்? “பணம் பத்தும் செய்யும்” என்பது உண்மைதான்.

இந்நேரத்தில் நம் புலம்பெயர்ந்த மாணவர்களுக்கு தொழிற்கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவேண்டியது முக்கியமானதாகும். 2004 - 2005ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு வேண்டி பலஆயிரம் கையெழுத்துகளோடு மனு ஒன்று அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதற்கு கேட்ட கேள்வியும் பதிலும் நம்மை வெட்கித் தலைக்குனிவுக்கு ஆளாளக்கியது. கடந்த பத்தாண்டுகளில் பல மாணவர்கள் மருத்துவம் பயின்று சிலர் பட்டம்பெற்று வந்திருக்கிறார்கள் மகிழ்ச்சியான விசயம்தான். ஆனால் இவர்கள் அனைவரும் முகாம்களில் சேவை செய்கிறார்களா? இல்லையே பலர் வெளிநாடுகளக்குச் சென்றுவிட்டார்கள். இருப்பவர்களும் எம் மக்களுக்கும் சேவையாற்றவில்லை முகாம் மக்களுக்கும் பயன்படவில்லை. இப்படியிருக்கும்போது இடஒதுக்கீடு தேவைதானா? இடஒதுக்கீட்டால் நமக்கும் நஷ்டம்தானே மிச்சம் என்றார்கள். இந்தச் சூழலிலும் புதுச்சேரி முகாமில் உள்ள நம் மாணவர் புதுச்சேரி “ஜிப்மர்” மருத்துவமனையில் மருத்துவம் செய்வதை ஆனந்த விகடன் நேர்காணல் கண்டது ஆறுதலான செய்தியாகும்.
“வாடிய பயிரைக்; கண்ட போதெல்லாம் வாடினேனே” என்ற வள்ளலார் நம் மனித மரபில் வந்;தவர்தானே, கருவுறாது கருணையுற்ற அன்னை தெரசா, பாரத சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தி அனைவருமே பிறர் வலிகளை தம் வலிகளாய் எண்ணியவர்கள் நான் சொல்லிக்கொள்வது இதுதான். மருத்துவத்துறை ஒரு பொன்னான சேவைத்துறை. சேவை செய்யும் நோக்கமிருந்தால் மருந்துவம் படியுங்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமானால் வேறுபல துறைகள் இருக்கின்றன. தயவு செய்து மருத்துவத்துறையை எடுத்து மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள். பத்து இருபது சம்பாதிக்கும் ஆட்டோக்காரன் “பிரசவத்திற்கு இலவசம்” என எழுதி உதவும்போது மருத்துவர்களாகிய உங்களால் ஏன் முடியவில்லை? மருத்துவர்கள் நோயாளிகளின் வலிபோக்க வந்த தெய்வங்கள். வலிபோக்கிகளாய் ஆனால் உயிர் பிழைத்து உளமார வாழ்த்தும் அந்த வாழ்த்துகளும் ஆசியும் எவ்வளவு பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது.

No comments:

Post a Comment