Monday, August 18, 2008

ஈழத்து காந்தியின் சிறப்புகள்

(தந்தை செல்வா)

செல்லமாக ஒரு செல்வா
சிறப்புற பாரினிலே
செழிப்புடனே வாழ்ந்தாரைய்யா
செவியின்பம் குறைந்திடினும்
செப்புகின்ற சொல்வன்மை
திறமுற பெற்றாரைய்யா
செழிப்புற ஒரு
தேசியம் காண எண்ணி
முழுமுச்சாய் உழைத்தாரைய்யா
இலக்குமிகுந்த உரிமைகள்
இன்னதென்று எடுத்துரைக்க
பாராளுமன்றமும் சென்றாரைய்யா
விடுதலைக்கு மார்க்கமுண்டு
என்றிருக்க
நம் தந்தையை காலதேவன்
வந்தணைத்துக் கொண்டானையா
தூர் அதிஸ்ட வசத்தாலோ
தூயவரை நாமிழந்தோம்
விடிவுகாண அவர் ஆன்மா
நம்மூடனே இருக்குதைய்யா

பி.ப யோகா
வாழவந்தான் கோட்டை

No comments:

Post a Comment