Monday, August 18, 2008

வாழ்வு செழித்திட கல்வியோடு வாழ்க்கை நெறி தேவை

ஈழகவிதாசன். மா. ஞானசூரி
எடுப்பு: வாழ்க்கையானது செழித்திட கல்வி மட்டுமிருந்தால் போதாது. வாழ்க்கையின் நெறிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். கல்விநெறி இல்லாமல் வாழ்க்கைநெறி சிறப்படைந்ததாக இதுவரை எவரும் கூறியதில்லை அதேபோல் வாழ்க்கை நெறியின்றி கல்விநெறி சிநப்புற்றதாகவும் கூறியதில்லை. சரியான விகிதத்தில் உணவினை உட்கொண்டால் உட்கொள்பவரின் வாழ்நாள் நீடிக்கின்றது. அதுபோல் இருநெறிகளையும் சரியான விகிதத்தில் பெற்றுக்கொண்டால் அந்த வாழ்வு தேவலோகத்தின் அமிழ்தத்தின் இனிமையை விடஇ எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தினை விடஇ தஞ்சையின் பசுமையை விடஇ இனிமையாகஇ உயர்வாகஇ பசுமையாக செழிப்புடன் வளரும்.
தொடுப்பு: கல்விநெறிஇ வாழ்க்கைநெறி இவ்விரண்டும் வாழ்வு செழிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
1. கல்விநெறி:
“ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” (புறம்)
ஆசிரியரை வழிபடுவதனின்றும் தவறாது கல்வியினைக் கற்றல் வேண்டும். கல்வி அறிவை வளர்க்கும் ஒரு சாதனம். கல்வி ஒரு அறிவுப்பெட்டகம். ஆதை அனைவரும் பருக வேண்டும. கல்வியினை தவறாது கற்றல் நன்று என்று புறநானூறு கூறுகிறது. ஆகவே கல்விநெறி வாழ்வு செழிப்படைவதில் ஒன்றாகிவிட்டது.
2. வாழ்க்கை நெறி:
“ பண்புநெறி நட்புநெறி --- மனித நேயம்
நன்றியறிதலோடு நல்லொழுக்கம் - இவை
ஜந்நெறியும் ஒருங்கேபெற்றால
வாழ்வு செழிப்பாகிடும்” (புதுக் கவிதை)
இந்த ஜந்நெறியும் வாழ்க்கை நெறிககு அவசியமென புதுக்கவிதை ஒன்று சுட்டுகின்றது.
பண்புநெறி: கல்விநெறியுடன் பண்புநெறியையும் கற்றுக்கொண்டதால் பண்டைத் தமிழர்கள் ‘பண்புடையோர்கள்’ என போற்றப்படுகின்றனர். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பண்பு நெறியினால்தான் அந்நாடு சிறப்பாக பேசப்படும். பண்புநெறி விலங்புகளுக்கும் இ மனிதர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் காட்டுகின்றது.
“ பாடறிந் தொழும் பண்பினாரே” (புறம்)
உலகத்தாரோடு இணைந்து வாழும் மக்களை பண்புடையவர்கள் என புறநானூற்றுப் பாடல் கூறுறகிறது.
“அரம்போலும் கூர்மைய ரேனும்மரம் போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்” (குறள்)
என பண்பில்லாதோரை மரத்துக்கு ஒப்பாக வள்ளுவர் சாடுகிறார்.
இசையில்லாத பாடல் சிறப்பாக அமையாது. அதுபோல் பண்பாடு இல்லாத மனிதர்களும் சிறப்பாக பேசப்படமாட்டார் என்பதற்கு இக்குறள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
“ பண்என்னாம் பாடற்கு இவையபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இலாத கண்” (குறள்)
தமது தலையில் நரை தோன்றாமைக்கு தாம் வாழும் ஊரில் பண்புடையோர்கள் பலர் வாழ்வதே காரணமென பிசிராந்தையார் கூறுவதிலிருந்து பண்புநெறியின் சிறப்பும் அவசியம் புலப்படுகின்றது.
2. நட்பு நெறி: : நட்பு மனிதப் பண்பாடுடன் கலந்துவிட்ட ஒரு வாழ்வியல் நெறி. மனிதநேயம் மலர நட்பு ஒரு சிறந்த வழிகாட்டி தனிமனிதன் சமுதாயத்தோடு இணைவகற்கு நட்பு உதவி செய்கின்றது வாழ்க்கை நெறியில் நட்புநெறி தனியொரு சிறப்பைப் பெற்றுள்ளது. வள்ளுவர் தமது குறளில் நட்புக்கு இலக்கணம் வகுத்து தனிஒரு அதிகாரத்தை நட்பு நெறிக்காக எழுதியிருப்பது நட்பின் நெறிப்பாட்டைக் காட்டுகின்றது.
“உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள்)
இக்குறள் நட்பின் நெறிப்பாட்;டை உயர்த்திக் காட்டுகிறது.
பண்டைத் தமிழர்கள் தம்கண்போல் நண்பரை மதித்தனர். அவர்களுடன் கலந்து பழகிப்பெறும் மகிழ்ச்சியை இனியதாகக் கருதினர்.
“ முந்தை யிலிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்;” (நற்றி)
என்ற நற்றிணைப் பாடலடி நட்பினை மதிக்கும் மனப்பான்மையையும் நண்பர்களின்பால் கொண்ட நன்னம்பிக்கையையும் உயர்த்திகின்றனர். இதே நட்பினை நாலடியாரும்
“ சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப் படு வார்” (நாலடி)
என்ற பாடல் மூலம் நட்புநெறியை உணர்த்துகிறாhர்.

“ உலகம்………. ஃ இன்பமுடன வாழவும் ஃ அன்புடன் வளரவும் ஃ அமைதி நிலைபெறவும் மனிதா ஃ ஈயடா பெட்டவுடன் ஃ நன் நட்பே!” (புதுக்கவிதை)
3. மனித நேயம்: மனிதரின் உள்ளத்தின் அடிமனதிலிருந்து வெளிப்படுகின்ற உண்மையான அன்பே மனிதநேயம் ‘ நேயம்;’ என்பது நாம் வாழ்வதற்கும் பிறரை வாழ்விப்பதற்கும் அடிபடையான பண்பாகும். மனிதநேயம் என்பது இனம் நாடு மொழி என்ற எல்லைகளுக்கட்பால் உயர்ந்து நிற்கும். மனிதநேயம் பற்றி சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
உலகம் ஒன்றே உலக மககள் அனைவரும் உறவினர் என்று கூறுகின்றார்.
வேடர்குலத்தில் பிறந்தவனையும் இ வாரைகுலத்தில் பிறந்தவனையும் இ அரக்ககுலத்தில் பிறந்தவனையும் இ இராமன் தனது சகோதரர்களாக ஏற்றுக்கொண்ட மனிதநேயப் பண்பாட்டை மனிதநேயம். சகோதரத்துவமாக மலர்ந்ததை கம்பராமாயணம் யுத்தகாண்டத்தில் விளக்கி காட்டியுள்ளது மனிதநேயத்தின் சிறப்பை சுட்டிக்காட்டுகின்றது.
“ மதவெறி பூசலை ஃ நிறுத்திப் பார் ஃ மாதம் மும்மாரி பொழியும் ஃ இனவெறியை இடித்துரைத்துப் பார் —நீ ஃ இகழ்ந்தவருடன் நேசம் ஃ வளர்வது காண்பாய் மனிதா!” (புதுக்கவிதை)
3. நன்றியிதல்: பிறர் செய்த நன்மையை மறவாது வாழும் பண்பு நன்றியறிதல் எனப்படுகின்றது. நன்றியறிதல் என்பது ஒருவர் நமக்குச் செய்த நன்மைக்கு ஈடாக மீண்டும் நன்மை செய்வதல்ல. தகுந்த காலத்தில் பயன் கருதாது நமக்கு நன்மை செய்யாதவருக்கும் நாம் நன்;மை செய்தலே நன்றியறிதல் ஆகும். சங்ககால மக்கள் நன்றிக்கடனை போற்றி வளர்த்தனர் நன்றி மறத்தலை தீமை என்று கருதினர் ஆன்முலையறுத்தல் கருச்சிதைத்தல் அந்தணர்க்கு கொடுமை செய்தல் இவற்றையெல்லாம் விட மிகப்பெரு;ங கொடுமை நன்றி மறப்பதே என்று புறநானூறு எனும் நூல் கூறுகின்றது.
தன் துன்பத்தில் உதவிய ஒருவற்கு உதவாது செய்ந்நன்றி மறந்தானின் செல்வம் தானாகவே கெட்டழியும் அவன் நரகத்தின்கண் செல்வான் என்று வள்ளுவர் கூறுகிறார்.
“ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்)
தமக்கு ஒருவர் உதவி செய்தால் அவருக்கு எவ்வகையிலாவது கைம்மாறு செய்திட வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பெருமையாகக் கருதியவர்கள் நம் முன்னோர்கள் இதனை
“ முன்னொன்று தகக்காற்றி முயன்றவர் இறுகிக்கண்
பின்னொன்று பெயர்தாற்றும் பீடுடையாளர்” (கலித்)
என சங்க இலக்கியமான கலித்தொசை எடுத்துரைக்கின்றது.
3. ஒழுக்கம்: ஒழுக்கமுடைய வாழ்Nவு சிறந்த வாழ்வு உயர்ந்த வாழ்வு. அறிவும் ஒஐக்கமும் உடைய சான்றோர்களின் ஒழுக்கலாறுகளை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வதே மனிதருக்குரிய கடமையாகும் ஒழுக்கநெறி தவறியோரின் வாழ்வு சிறப்படைந்ததாக சரித்திரம் இல்லை.
மணிஇ பொன் இ முத்து இவற்றிலான அணிகலன்கள் பழுதடைந்தால் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் எனும் நெறியானது பழுதடைந்தால் அவற்றை சரிசெய்வதென்பது இயலாதகாரியம் ஆகும்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும் (குறள்)
ஒழுக்கம் மேன்மையையும் இன்பத்தையும் நல்வல்லது. நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாக அமையும். தீய ஒழுக்கம் பழியையும் துன்பத்தையும் தரும் என்கிறார் வள்ளுவர்.
“கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை” (தொல்)
ஒழுக்கநெறியை உள்ளத்தில் அமைத்து அறநெறியில் நிற்றல் வேண்டும என்று கூறுகின்றது தொல்;காப்பியம் நல்லொழுக்கம் பண்பட்ட வாழ்வியல் நெறியாகும்.
முடிப்பு:
இவை ஜந்நெறியும் வாழ்க்கை நெறியின் ஜம்புலன்கள். இதில் ஏதேனும் ஒரு புலன் கெட்டுப்போனால் அவன் முழு மனிதனாக முடியாது. ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இவை ஜந்நெறிகளும் இன்றியமையாதவைகள்.
கல்வியில்லாத வாழ்க்கைநெறி துடுப்பு இல்லாத படகிற்குச் சமமாகும். வாழ்க்கை நெறியின்றி வெறும் கல்வி மட்டும் பெறுதல் சிறகு இல்லாத பறவைக்குச் சமமாகும். படகானது கரைசேர துடுப்பு மிக அவசியம். அதுபோல் மனிதன் தனது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு கல்வி மிக அவசியம். பறவையானது உயரே பறப்பதற்கு சிறகு மிக அவசியம் . மனிதனும் தனது வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதற்குமம் பிறரோடுஇ பழகுவதற்கும் வாழ்க்கைநெறிகள் இன்றியமையாததாகின்றது. எனவே ஒவ்வொருவருடை வாழ்வும் செழிப்படைவதற்கும் உயர்ந்து விளங்குவதற்கும் கல்வியோடு வாழ்க்கைநெறியும் அவசியமே.

“ சங்கே முழங்கு! ஃ வானுலகம் வாழ்த்திடவும் ஃ வையகம் போற்றிடவும் ஃ வளமான வாழ்வக்கு —— கல்வியோடு ஃ வாழ்க்கைநெறி தேவையெ ஃ சங்கே முழங்கு!” (புதுக்கவிதை)
குறிப்பு:2004 இல் சென்னை தெய்வத் தமிழ்ச்சங்கம் நடாத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது

No comments:

Post a Comment