Monday, August 18, 2008

நாவலர் மன்றம்

(நாவலர் உள்ளே வருகிறார்)
மாணவர்கள் :வணக்கம் நாவலரே!
நாவலர் :வணக்கம். தோரணமெல்லாம் கட்டி நாவலர் மன்றமே கலைகட்டிருக்கு.
தமிழினி :ஓம் நாவலரே, நம் வேர்விடும் நம்பிக்கை இதழ் 29.07.2008 அன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதுதான் இந்த ஆரவாரம்.....
நாவலர் :ஓம். நம் வேர்விடும் நம்பிக்கை இதழினால் இந்த ஓராண்டிலே பலபேர் எழுத்தாளராக உருவாகியிருப்பதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. சரி, இந்த மாத எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா?.
பூங்குன்றன் :ஓம். கே.கணேஷ் அவர்களின் பெற்றோரும், மூதாதையரும் திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் என்ற சிற்றூரில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். மலையகத் தமிழர்கள். கண்டியை அடுத்துள்ள அம்பிட்டிய என்னும் இடத்தில் உள்ள தலைப்பின்னாவ என்னும் தோட்டத்தில் தான் கே.கணேஷ் அவர்கள் பிறந்தார்.
பூவிழியாள் :நாவலரே அய்யா அவர்கள் 02.03.1920 அன்று திரு.கருப்பண்ணன்-திருமதி வேளுரம்மாள் அவர்களின் மகனாகப் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சித்திவிநாயகம். வீட்டில் அழைத்தப் பெயரே நிலைத்துவிட்டது. தோட்டத்து எல்லையிலிருந்த பெண்கள் பள்ளியில் சிங்கள மொழியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆனாலும் அவரது அம்மா தேவார திருவாசகங்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைக் கற்றுத்தந்ததோடு தமிழ்நாட்டில் இருந்து அஞ்சல் வழியாக பல நூல்களைப் பெற்று படிக்க வைத்துள்ளார்.
நாவலர் :ஆகா.....ஆரம்பமே படு வேகமாக இருக்கு.....

கனியன் :ஓம் நாவலரே, இடைநிலைக் கல்வியை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆங்கிலத்தில் படித்துள்ளார். ஆனாலும் தமிழ்மொழியில ஆர்வம் இருந்ததால 1934 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கம் வந்து தமிழ் கற்றிருக்கார்.
நாவலர் :மிகச் சரியாச் சொன்னீங்க....இந்தியாவுல இருந்தபோது, ஜெய்;ப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “அபேதவாதம் ஏன்?” (றூல ளழஉழைடளைஅ?), ஜவஹர்கலால் நேரு எழுதிய “இந்தியா எங்கு செல்கிறது” (றூiவாநச ஐனெயை), சுபாஷ் சந்திர போஸ் எழுதிய “சாம்ய வாதம்” ஆகிய நூல்களை வாசித்து இடதுசாரிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். அபேதவாதக் கட்சியில் ராமண்ண சாஸ்திரியுடன் அய்யாவுக்குத் தொடர்பு இருந்ததால் இந்திய ரகசிய காவலர்கள் தமிழ்ச்சங்கத்தில் சென்று விசாரித்திருக்கிறார்கள். அவ்வளவுதான் கல்லூரியிலிருந்தே நீக்கிட்டாங்க..
குழலினி :அப்படியா.....படிப்பு பாதியிலே போயிருக்குமே.....
நாவலர் :இல்ல...இல்ல....திருவையாறு அரச கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்து விட்டு 1938-ல் இலங்கைக்குத் திரும்பி வந்துவிட்டார். சிங்களம், தமிழ், ஆங்கிலம், கற்ற கே.கணேஷ் அவர்கள் தமிழ் எழுத்துலகத்திற்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
பனிமலர் :ஓம் நாவலரே... தமிழ்நாட்டில் இருந்த ஆனந்த போதினி என்ற இதழில் 1932-ல் முதன் முதலில் அறம் செய்ய விரும்பு என்று கட்டுரை எழுதியவர், டாக்டர் வரதராஜ் அவர்களின் தமிழ்நாடு வார இதழிலும், 1935-ல் மாதர் மறுமணம் என்ற இதழிலும், சென்னையில் வெளியான லோக சக்தி, மணிக்கொடி, போன்ற இதழ்களிலும் எழுதியுள்ளார்.
நாவலர் :நிறைய தகவல்களைச் சேகரித்துள்ளீர்கள் நன்றி. மேலும், கலா மோகினி, கிராம ஊழியன், சிவாஜி, சக்தி, ‘னுமான், ‘pந்துஸ்தான் ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார்.
மகிழன் :கே.கணேஷ் அவர்கள் தனது சொந்தப் பெயரிலும், சித்தார்த்தன், கே.ஜி, மலைமகன், கலாநேசன், கணேசு ஆகிய புனைப்பெயரிலும் எழுதியுள்ளதாக எங்கள் மாலைப் பள்ளி ஆசிரியை சொன்னாங்க நாவலரே...
நாவலர் :உண்மைதான். அய்யா அவர்களின் எழுத்துப் பணிகளில் முக்கியமானது பிற மொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தது என்றால் மிகையில்லை.
அகலிகை :அய்யாவின் மொழி பெயர்ப்பைப் பற்றி சொல்லுங்க நாவலரே!
குழலினி :நாவலரே நான் சொல்றேன். அய்யா அவர்கள் மொழி பெயர்த்த ஒரே நாவல் தீண்டாதவன் (ருவெழரஉhயடிடநள) (1947). மேலும் அஜந்தா(1964),அந்த கானம்(1974), இளைஞன் எர்கையின் திருமணம்(1990), கூனற் பிறை(1990), உடலும் உணர்வும்(1992) ஆகிய அய்ந்து குறு நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு நூலுருப் பெற்றுள்ளன. உடலும் உணர்வும் நூலில் ஒரு மந்தையோட்டியின் கதை, ஒரு பாரப்பேருந்து ஓட்டுனரின் கதை என இரண்டு குறு நாவல்கள் இணைந்துள்ளன.
நாவலர் :அமைதியா இருக்கீங்க கைதட்டி பாராட்டுங்க......(எல்லாரும் கைதட்டல்). ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு குழலினி. அய்யா அவார்களின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. யாராவது சொல்றீங்களா.....
மகிழன் :நான் சொல்றேன். வட இந்திய எழுத்தாளரும், அகிழ இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமான கே.ஏ.அப்பாஸ் அவர்களின் பத்து சிறுகதைகளை மொழிபெயர்த்து குங்குமப் பூ(1956,1963)என வெளியிட்டார். லூசுன் என்ற சீன எழுத்தாளரின் சிறுகதைகளை மொழிபெயர்த்து போர்க்குரல்(1981), சீன எழுத்தாளர் லூசுன் சிறுகதைகள்(1988), பிறகு இவை இரண்டையும் இணைத்து சீன அறிஞர் லூசுன் சிறுகதைத் தொகுப்பு(1995),மற்றும் மூங்கிற் பள்ளம் (வியட்நாமியச் சிறுகதைகள்,1992) ஆகியன வெளியிட்டுள்ளார்.
நாவலர் :பாராட்டுக்கள்.....பாராட்டுக்கள்....(எல்லோரும் கைதட்டுதல்). கணேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. யாரு சொல்றா....
பூவிழியாள் :நான் சொல்றேன் நாவலரே. N‘hசிமின் சிறைக் குறிப்புகள்(1973,1985), பல்கேரியக் கவிதைகள்(1984), ஒரு சோவியத் கவிஞனின் புதுக்கவிதைகள்(1989), எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே(1988), பாரதி பக்தன் பார்பரா கவிதைகள்(1989), உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சேன்கோ கவிதைகள்(1993), உக்ரேனிய அறிஞர் இவன் ஃபிரான்கோ கவிதைகள்(1994) போன்றவைகள் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள் நாவலரே.
நாவலர் :ரொம்ப மகிழ்ச்சி. பாராட்டுக்கள். (எல்லோரும் கைதட்டுதல்).கே.கணேஷ் அவர்கள், இன்றைய எனது கடமைகள்(1990), மகிழ்ச்சிமிகு குழந்தைகள்(1986), சொந்த வேலையில் சுகம்(1990) மற்றும் ஷிகானும் நத்தையும் என நான்கு சிறுவர் இலக்கிய நூல்களும் மொழிபெயர்த்துள்ளார். இதைத் தவிர்த்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியுள்ள கணேஷ் அவர்கள் இந்தியாவில் ‘தென்றல்’, ‘நவசக்தி’, ‘பாரதி’,போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். நம் நாட்டு வீரகேசரி இதழில் 1949 இல் துணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
கனியன் :நம் தமிழ்மொழிக்கு மிகஉயரியத் தொண்டாற்றியுள்ள கே. கணேஷ் அவர்களை இந்த மாதம், அதுவும் வேர்விடும் நம்பிக்கை இதழின் இரண்டாம் ஆண்டின் முதல் மாதத்திலே அறிந்துகொண்டோம் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
நாவலர் :சரி, அடுத்தமாதம் நாவலர் மன்றத்தில் காப்பியங்கள் பல தந்த கவிஞர் ஜின்னா அவர்களைப்பற்றி தெரிந்து கொள்வோம். எல்லோருக்கும் நன்றி;.
மாணவர்கள் :நன்றி நாவலரே.

மாணவச் செல்லங்களே! கவிஞர் ஜின்னா‘; அவர்களைப் பற்றியத் தகவல்களைச் சேகரித்து அனுப்புங்கள்.

No comments:

Post a Comment