Monday, August 18, 2008

அழியாத அகதிகள்

சியாம்சன்
ஒக்கூர்


என் இதய ஈழமே
என் உயிர் மூச்சு
என்று உன்னைச் சேரும்
என் விழிகள் தேம்பிய காலம்;
என்று மெல்ல மெல்ல போகும்
இந்த இந்திய தேசத்தில்
நாம் என்ன இரவல் மக்களா?
ஒரு பள்ளி செல்லாமலே
நமக்கென்ன அகதிப்பட்டமா?
ஒரு முற்றுப் புள்ளிக்குள்
முடிந்திடாத வார்த்தை போலவே
நம் முகவரி தொலைந்த
இந்த வாழ்க்கை தொடருமா?
அங்கு எரியும் ஈழத்தை
அனைத்திட மழை சாரல் போடுமா?
நம் அடிமை வாழ்க்கையை உடைத்திட
புது விடியல் பிறக்குமா?
என்னும் அழியாமல் தொடரும்
நம் அகதிப்பட்டம் அழியுமா?

------------------------------------------------

No comments:

Post a Comment