Thursday, July 10, 2008

தடைகளை உடைத்து விளையாடு
``````````````````````````````````````````````````````
ஈழத்துச் செல்வன் இரா. லிங்கேஷ்
வாழவந்தான் கோட்டை
``````````````````````````````````````````````````````
எல்லையில் இரு மாகணம்
ஏழ்மையில் எட்டு மாவட்டம்
எத்தனை திறமை இருந்தும்
ஏற்க மறுக்கும் அரசாங்கம்
செத்துப் போகப் பிறந்த
சில்லறைத் தமிழனுக்கு
சிட்ணியில் என்ன ஒலிம்பிக்
எண்ணும் ஏழனம்

பட்டெண அங்கு சுற்றி வளைப்பு
பந்து விளையாடும் சிறுவன்
பயங்கரவாதி என்று சிறைபிடிப்பு

பாடசாலை மணி ஓசை
பதிலாக காலையில்
வெடி ஒசை

கட்டம் கட்டமாய் கிளிதட்டு
எம் கடக்கரை மணல் விளையாட்டு
கதிரவன் மறையும் நேரம்
கம்பிக் கூட்டில் சிறைவாசம்

பட்டது போதும்
பொங்கி எழு
பயம் இனி இல்லையென்று
ஆணையிடு
சட்டம் இட்ட சாதி வெறியர் முன்
சரித்திரம் படைக்கப் புறப்படு

கொட்டும் மழையில்
குமிழி போல் அலைந்தாலும்
குறுகிய காலத்தில்
விடுதலை காண
கண் கெடுக்கும் கயவர் முன்
களத்தில் இறங்கி விளையாடு

பேரினவாதம் காட்டும் ராஜங்கம்
பிடியில் இருந்து நம்மைக் காக்க
தலைகள் சில நேரம் சாயலாம்
தமிழினம் சாயாது என்ற
தங்கத் தலைவன் பாதையில்
தடைகள் உடைத்து விளையாடு.

No comments:

Post a Comment