Thursday, July 10, 2008

கனவாகும் வாழ்க்கை

ஏ. கௌரி
நாட்டரசன் கோட்டை

என் வேதனையை
வெத்துப் பேப்பரில்
விளக்கிச் செல்லலாம்
பேனாவை எடுத்தால்
வெட வெடக்கிறது கை

கண்ணீரை மையாக்கி
கவிதை எழுதும்
சிறகொடிந்த பறவை நான்
கண்களை மூடினால்
கனவிலும் அலறல் சத்தம்
உணவிலும் கண்ணீர் வாசம்

வன்முறை களத்தில்
வாழும் எம்மக்கள்
வாழ்க்கை விடியாதா?
மரண யுத்தத்திலிருந்து
மனிதம் விடுபட்டு
சமாதானம் பிறக்காதா?

புலம்பெயர்ந்த வாழ்வு
புரியாத புதிராய்
பதினெழு வருடங்களாய்
பாதை தெரியா வாழ்க்கை
எங்கே போகிறோம்
எதற்காய் வாழ்கிறேம்
எதுவும் புரியவில்லை
அடுத்த தலைமுறையாவது
அகதிப்பட்டம் தவிர்க்குமா?

No comments:

Post a Comment